அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 16 இந்திய நிறுவனப் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு, சென்ற வாரத்தில் 400 கோடி டாலர் (சுமார் ரூ.18,500 கோடி) உயர்ந்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிப் பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக 205 கோடி டாலர் (சுமார் ரூ.9,500 கோடி) அதிகரித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு 161 கோடி டாலர் அதிகரித்து 3,247 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதர தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களான விப்ரோ மற்றும் மகிந்திரா சத்யம் ஆகியவற்றின் பங்குகளின் மதிப்பு மொத்தத்தில் 39.40 கோடி டாலர் உயர்ந்துள்ளது. பத்னி கம்ப்ïட்டர் சிஸ்டம் நிறுவனப் பங்குகளின் மதிப்பு 2 கோடி டாலர் அதிகரித்துள்ளது.
டாட்டா மோட்டார்ஸ், டாட்டா கம்ïனிகேஷன்ஸ் மற்றும் எச்.டீ.எஃப்.சி. வங்கி ஆகியவற்றின் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 65.80 கோடி டாலர் சரிவடைந்துள்ளது. இவற்றுள் எச்.டீ.எஃப்.சி. வங்கிதான்அதிகபட்ச சரிவை சந்தித்துள்ளது.
ஐபிஎல்: 2-வது இடம் யாருக்கு? பஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தானுடன் மல்லுக்கட்டும்
சன்ரைசர்ஸ்
-
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ள சன்ரைசர்ஸ் அணி
இரண்டாவது இடத்திற்கு ராஜஸ்தான் அணியுடன் மல்லுக்கட்டுகிறது. என்ன நடக்கிறது?
5 மணிநேரம் முன்பு