ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் 55 கோடி பேர் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார். குலுக்கல் முறையில் முகவர்களை தேர்வு செய்து கிராமங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும்(ராஜிவ் காந்தி கிராம விதாரக் யோஜனா) திட்டம் ராஜஸ்தானில் நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தை துவக்கி வைத்து மத்திய அமைச்சர் முரளி தியோரா குறிப்பிடுகையில், 'நாடு முழுவதும் 55 கோடி பேர் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். கிராம மக்களுக்கும் இந்த திட்டம் பயன்பட வேண்டும் என்பதற்காக கிராம முகவர்களை தேர்வு செய்து எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்க உள்ளோம். முதல் கட்டமாக நாடு முழுவதும் 1,266 கிராம பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்க உள்ளோம். ராஜஸ்தானில் மட்டும் 192 இடங்களில் எரிவாயு சிலிண்டர் வினியோகிக்கப்பட உள்ளது' என்றார். | |
ஊட்டி: இ-பாஸ் ரத்து செய்யவில்லை எனில் ஒரு நாள் ஓட்டல், காட்டேஜ்கள் மற்றும்
அனைத்து வியாபாரிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த - Dinakaran Daily News
-
1. ஊட்டி: இ-பாஸ் ரத்து செய்யவில்லை எனில் ஒரு நாள் ஓட்டல், காட்டேஜ்கள்
மற்றும் அனைத்து வியாபாரிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த Dinakaran
...
2 மணிநேரம் முன்பு