சென்ற 2009-ஆம் ஆண்டில், துபாய் ரியல் எஸ்டேட் துறையின் விற்பனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு, இந்திய முதலீட்டாளர்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். அவ்வாண்டில், துபாயின் ரியல் எஸ்டேட் துறையில், இந்திய முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீட்டின் அளவு 24 சதவீதமாக உள்ளது. இதனையடுத்து, இதர நாட்டினரை விஞ்சி இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
இந்தியர்களுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் 21 சதவீத பங்களிப்பைக் கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.
Posts Relacionados: